உள்ளூர் செய்திகள்
TET தேர்வு: சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு- அன்பில் மகேஷ்
- எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்.
- தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைதொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்,"எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்" என்றார்.
இதுகுறித்த அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில்," TET தேர்வு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.