தமிழ்நாடு செய்திகள்

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பில் ஸ்டாலின் அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோல் - விஜய்

Published On 2026-02-13 13:48 IST   |   Update On 2026-02-13 13:48:00 IST
  • நமக்கு அவர்களைபோல் கொள்ளையடிக்க அனுபவம் இல்லை.
  • த.வெ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் கனவு.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

* 2 ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

* 75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று த.வெ.க. மக்கள் சக்தியாக மாறி உள்ளது.

* சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோல்.

* நமக்கு அவர்களைபோல் கொள்ளையடிக்க அனுபவம் இல்லை, அது எல்லாம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

* மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தாலே போதும், ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க முடியும்.

* கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்.ஜி.ஆர்., கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தவர்கள் தான் நம்மை அனுபவம் இல்லாதவர்கள் என கூறுகின்றனர்.

* என்னால் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் செய்து காட்டுகிறேன்.

* ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு கடந்து விட்டது. இப்போது தான் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி கனவை கேட்கிறார்கள்.

* மக்களின் கனவு உங்களுக்கு தெரியுமா ஸ்டாலின் சார்? ஏதாவது நல்லது செய்வீர்கள் என நினைத்துதான் உங்களுக்கு வாக்களித்தனர்.

* ஸ்டாலின் சார் உங்களின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். த.வெ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் கனவு.

* தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் சார் தான் அவுட் ஆஃப் கன்ட்ரோல்.

* மொத்தத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News