தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

Published On 2025-04-22 14:51 IST   |   Update On 2025-04-22 14:57:00 IST
  • இந்த மாதம் முதல் 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் பயனடைவார்கள்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு

ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News