தமிழ்நாடு செய்திகள்

பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி... பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில்

Published On 2025-10-03 12:34 IST   |   Update On 2025-10-03 12:34:00 IST
  • பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
  • எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை.

கோபிசெட்டிபாளையம்:

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

* தனது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

* நான் அமைதியாக இருப்பது அ.தி.மு.க.வில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான அறிகுறி.

* எனக்கு வழிகாட்டி முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியில் பயணிக்கிறேன்.

* பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

* எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் வழியாக பிரசாரத்திற்கு வருவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை என்றார்.

இதனிடையே, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி என்ன நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

Tags:    

Similar News