தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சரின் 4 ஆண்டு சாதனை நாளைய வெற்றியை உறுதியாக்கி விட்டது - செல்வப்பெருந்தகை

Published On 2025-05-07 14:03 IST   |   Update On 2025-05-07 14:03:00 IST
  • கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார்.
  • தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைந்து, இன்று 5-ம் ஆண்டில் காலடி பதித்து மகத்தான சாதனைகளை புரிந்து வருகிற நிலையில் திசையெங்கும் மக்கள் பாராட்டுகிற மகத்தான ஆட்சி புரிகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 2021 இல் ஆட்சி அமைந்தபோது, 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையோடு அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.விடம் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவிகிதமாக உயர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசின் வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தை விட உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவேற்றியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவவேற்றியதோடு, கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது சாதனைகளின் சிகரமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் ஆகியவற்றில் மிகச் சிறந்த அளவில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

எனவே, தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 4 ஆண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News