தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியை குறைசொல்ல இ.பி.எஸ்.-க்கு அருகதை இல்லை - ஆர்.எஸ்.பாரதி

Published On 2025-05-08 14:07 IST   |   Update On 2025-05-08 14:07:00 IST
  • சட்டம் ஒழுங்கை சீரழித்து கேடுகெட்ட அடிமை ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டி.வி.யில் பார்த்து தெரிந்துகொண்ட எடுபிடி பழனிசாமியின் அடிமை ஆட்சி இதுவல்ல.

தி.மு.க.வின் 4 ஆண்டு கால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* சட்டம் ஒழுங்கை சீரழித்து கேடுகெட்ட அடிமை ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சியை குறைசொல்ல அருகதை இல்லை.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டி.வி.யில் பார்த்து தெரிந்துகொண்ட எடுபிடி பழனிசாமியின் அடிமை ஆட்சி இதுவல்ல.

* தி.மு.க. ஆட்சியின் மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

Tags:    

Similar News