தமிழ்நாடு செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
- மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், முகப்பேர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மேலும் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காட்டிலும் கனமழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வறுத்தெடுத்த நிலையில் மாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.