தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2025-06-24 14:15 IST   |   Update On 2025-06-24 14:15:00 IST
  • பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் எஸ்.ஆர் நகர் வடக்கு பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் தொல்லை அதிகரிப்பதுடன் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று ஏராளமான பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடை அமைந்துள்ள வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நொய்யல் புது சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு தங்களுக்கு இந்த கடை வேண்டாம் என மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

பொதுமக்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் திருப்பூர் எஸ்.ஆர். நகர் பகுதியில் சிலர் கடையை வைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொது மக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்டு வருகிறார்கள். புதிதாக வரும் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News