தமிழ்நாடு செய்திகள்

பிளவுபடுத்தும் அரசியல் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

Published On 2025-10-31 15:49 IST   |   Update On 2025-10-31 16:02:00 IST
  • பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.
  • பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.

பாஜகவினர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் கருப்பர்கள் எனக்கூறி தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.

பிஹாரில் ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் இங்கே வரப்போகிறார்கள்?; வேலை கேட்டு வரும் பிஹார் மக்களுக்கு இங்கு வேலை கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்திற்கான நிதி, கல்விக்கான நிதி என மாநிலத்திற்கான எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.

திமுக கூட்டணி பெற்ற வெற்றி, திமுக ஆட்சியில் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பிரதமர் பேசியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் செய்கிறார். பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள், பீகார் மக்களும் பாஜகவின் பொய்களை அறிவர்.

பிஹார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழில் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

நாங்கள் இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். இந்திக்காரர்களுக்கு எதிரி அல்ல; முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News