தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி - இ.பி.எஸ். சந்திப்பு உறுதியானது

Published On 2025-07-26 12:25 IST   |   Update On 2025-07-26 12:25:00 IST
  • பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி வருகிறார்.
  • பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சந்திப்பு நிகழ வாய்ப்பு உள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதையொட்டி பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு 10:30 மணிக்கு திருச்சி வருகிறார்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளது உறுதியானது.

பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சந்திப்பு நிகழ வாய்ப்பு உள்ளது.

இன்று இரவு 10.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News