தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல்: 39 பேரின் உயிரிழப்புக்கு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் - நயினார்

Published On 2025-09-28 11:39 IST   |   Update On 2025-09-28 11:39:00 IST
  • எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
  • ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

* எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.

* ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?

* 39 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும்.

* 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொண்டர்கள் தண்ணீர் கூட இல்லாமல் தவித்துள்ளனர்.

* கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

Similar News