எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது தி.மு.க.- மு.க.ஸ்டாலின்
- SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடக்கும் திருவரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது தி.மு.க.
* உடன்பிறப்பே வா என்ற பெயரில் தொகுதிவாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன்.
* புதுப்புது யுக்திகளுடன் நம்மை அழிக்க எதிரிகள் முயன்று வருகின்றனர்.
* நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதற்கு பெயர் தான் இயக்கம்.
* பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டலாம் என எண்ணுகின்றனர். அது நடக்காது.
* தி.மு.க.வினரும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
* SIR-க்கு எதிராக நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
* மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR-ஐ அ.தி.மு.க. ஆதரிக்கிறது.
* தி.மு.க. மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அ.தி.மு.க.வும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
* SIR-ஐ எதிர்க்க இ.பி.எஸ்.-க்கு தைரியமில்லை. டெல்லியில் உள்ள பிக்பாசுக்கு ஆமாம் சாமி என சொல்லித்தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.