தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என பேசும் பா.ஜ.க.வால் தான் அ.தி.மு.க.வுக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-26 12:11 IST   |   Update On 2025-06-26 12:11:00 IST
  • தமிழ்நாட்டு மக்களை தங்களால் பிரிக்க முடியாததால் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.
  • அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசியல் காரணங்களுக்காக கடவுள் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர்.

* தமிழ்நாட்டு மக்களை தங்களால் பிரிக்க முடியாததால் அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.

* இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளை தமிழ்நாட்டை அடகு வைக்க அனுமதிக்கக்கூடாது.

* மக்களுக்காக கவலைப்படாமல் மதத்திற்காக கவலைப்படுகின்றன பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும்.

* தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க.

* தி.மு.க. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்ததை பார்த்து, மதவாத அரசியல் செய்பவர்களுக்கு பற்றி எரிகிறது.

* தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என அ.தி.மு.க.வை வைத்துக்கொண்டே பேசுகிறது பா.ஜ.க.

* பா.ஜ.க.வால் அ.தி.மு.க.வுக்குத்தான் ஆபத்து.

* அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News