தமிழ்நாடு செய்திகள்

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு

Published On 2025-10-17 15:24 IST   |   Update On 2025-10-17 15:24:00 IST
  • பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
  • விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் பாலம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக பாலம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.

தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள தொழில் அதிபர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த ஊரை சேர்ந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

அங்கு உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோரிக்கை வருகிறது.

அதே போல பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்று கூறியதால் அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News