தமிழ்நாடு செய்திகள்

கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி: தமிழ்நாட்டில் இன்று கடையடைப்பு

Published On 2025-09-29 08:09 IST   |   Update On 2025-09-29 08:09:00 IST
  • பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
  • த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் தழுவிய கடையடைப்பில், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தடைபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News