தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி- தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2025-09-28 14:42 IST   |   Update On 2025-09-28 14:42:00 IST
  • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

முதற்கட்டமாக 39 பேரின் குடும்பங்களுக்கும் மொத்தமாக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News