தமிழ்நாடு செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி- தமிழக காங்கிரஸ் அறிவிப்பு
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.
முதற்கட்டமாக 39 பேரின் குடும்பங்களுக்கும் மொத்தமாக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.