கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்சில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? - இ.பி.எஸ். கேள்வி
- நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்?
- 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்?
சென்னை :
தமிழ்நாடு சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு இன்று தொடங்கியது. முதலில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
* இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சிக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது கிடையாது.
* கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி? அரசியல் செய்வது யார்?
* நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏன்? என்ன அவசரம்?
* 39பேரின் உடல்கள் காலை 8 மணிக்குள்ளாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்?
* ஒரு உடலை உடற்கூராய்வு செய்ய 1.5 மணிநேரம் ஆகும். ஆனால் 8 மணி நேரத்தில் 39 உடல்கள் உடற்கூராய்வு செய்தது எப்படி?
* அமைச்சர்கள் பதில் அளிக்குமாறு முதலமைச்சரே கூறிய போதிலும் சபாநாயகர் தடுப்பது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.