தமிழ்நாடு செய்திகள்

'சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன்' - காளியம்மாள்!

Published On 2025-12-12 20:10 IST   |   Update On 2025-12-12 20:10:00 IST
  • காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது
  • மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன்

நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024-ல் விலகிய காளியம்மாள், புதிய கட்சியை ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144-வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,  

"எனது அரசியல் பயணம் மக்களை சேர்ந்து இருக்கும். சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன். அவர்களுடைய பிரதிநிதியாக நிற்பேன். அதற்கான சூழல் விரைவில் வரும். வேறு கட்சிகளில் இணைவேணா என்பதற்கான முடிவை விரைவில் கூறுவேன்." என தெரிவித்தார். 

காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News