தமிழ்நாடு செய்திகள்

சாதியைத் தாண்டி பல காரணங்கள்! - ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை என முதலமைச்சர் உறுதி

Published On 2025-10-17 13:14 IST   |   Update On 2025-10-17 13:14:00 IST
  • பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.
  • ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.

ஆணவப்படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* சாதி இல்லை என்பதே தமிழனின் அடிப்படையாக இருந்தது.

* இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.

* பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் இது.

* வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.

* சாதி, மதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழிற்கு கொடுக்க வைத்தது திராவிட இயக்கம்.

* சமூக சீர்திருத்த ஆட்சியை நடத்தியவர் கலைஞர் கருணாநிதி.

* அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.

* அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்.

* சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வை மொழியே தமிழ்நாட்டின் கொள்கையாக இருந்தது.

* பலர் போராடிக்கிடைத்தது தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை.

* திராவிட இயக்கங்களின் முயற்சியில் தான் இனமும் மொழியும் தான் நமது அடையாளம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

* சீர்திருத்த சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது.

* சாதிய பெயரில் இருந்த 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* பள்ளி கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என சமூக நீதி விடுதி என மாற்றம் செய்யப்பட்டது.

* உலகம் அறிவு மயமாகி வருகிறது. அது அன்புமயமாவதை தடுக்கிறது. இது நம்மை வாட்டுகிறது.

* நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் மனதை வேதனைக்குள்ளாக்கி வருகின்றன.

* ஆணவ படுகொலைகளுக்கு சாதியை தாண்டியும் பல காரணங்கள் உள்ளன.

* எதன் காரணமாகவும் ஒருவர் மற்றொருவரை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

* ஆணாதிக்கமும் குற்ற செயல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது.

* ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News