தமிழ்நாடு செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

Published On 2025-05-23 21:39 IST   |   Update On 2025-05-23 21:49:00 IST
  • சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • திடீரென பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து உள்ளனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம், தரமணி, வேளச்சேரி, கிண்டி, குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திடீரென பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News