தமிழ்நாடு செய்திகள்

காமராஜர் குறித்து பேச்சு: திருச்சி சிவா எம்.பி.க்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2025-07-17 10:55 IST   |   Update On 2025-07-17 10:55:00 IST
  • பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.
  • தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் காமராஜர் இன்றைக்கும் அவரது ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றுகிறோம். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டான தலைவராக தன் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர். பெருந்தலைவர் மறைந்தாலும் இன்றும் என்றும் மறையாமல் வாழ்பவர்.

வருங்கால சமுதாயத்தினர் முன் மாதிரியான, நல்வழிகாட்டியான தலைவராக பெருந்தலைவரை ஏற்றுக்கொள்வது 100 சதவீதம் பொருத்தமானது. அப்பேற்பட்ட ஓர் உயர்ந்த தலைவரைப் பற்றி தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தவறான தகவலை பொதுவெளியில் தெரிவித்தது மிகுந்த வருத்தத்துக்குரியது, வேதனைக்குரியது. அவரது பேச்சு ஏற்புடையதல்ல. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இது போன்ற உத்தம தலைவரை, தமிழக மக்கள் மிகவும் நேசிக்கும் பெருந்தலைவரைப் பற்றி தவறான தகவல் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News