முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கு- தண்டனை விவரம் அறிவிப்பு
- 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு.
- முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொன்ற பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக்கிற்கு வாழ்நாள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோகிற்கு தலா 4 ஆயுள் தண்டனையும், குற்றவாளி ராகேஷிற்கு 5 ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
ஜெகதீஷ் மற்றும் அசோகிற்கு தலா ரூ.40,000, ராஷே்க்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை முதன்னை நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
மேலும், மூன்று பேருக்கும் மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.