தமிழ்நாடு செய்திகள்

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2024-11-30 19:56 IST   |   Update On 2024-11-30 19:56:00 IST
  • தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.
  • 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செல்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News