தமிழ்நாடு செய்திகள்

சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி கடும் வாக்குவாதம்

Published On 2025-04-08 12:40 IST   |   Update On 2025-04-08 12:40:00 IST
  • இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது என்று துரைமுருகன் கூறினார்.
  • சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் சபாநாயகருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சட்டசபையில் அ.தி.மு.க.வினர் பேசுவதை திட்டமிட்டு நேரலை செய்ய மறுக்கிறார். சபாநாயகரே மரபை கடைபிடிக்கவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர் என்று கூறினார்.

துரைமுருகன் - இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது, எதிர்க்கட்சி தலைவர் இதனை இதோடு விட்டுவிடவும்.

சபாநாயகர் அப்பாவு - எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். பேசுவது உண்மைக்கு புறம்பானது. எந்த பாகுபாகும் இல்லாமல் அனைவரும் பேசுவதை நேரலையில் காட்டி வருகிறோம் என்று கூறினார்.

சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News