தமிழ்நாடு செய்திகள்
அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை - எடப்பாடி பழனிசாமி
- அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.
- அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமையும், கவலைப்பட வேண்டாம்.
* அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயமாக சிந்தித்து செயல்படும் கட்சிகள்.
* சொந்த பலத்தைக் கொண்ட கட்சி அ.தி.மு.க., தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி.
* அ.தி.மு.க. தான் கூட்டணிக்கு தலைமை, அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
* தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.