தி.மு.க. ஆட்சியில் எல்லாம் வெற்று விளம்பரம்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- நகையை அடமானம் வைத்து நெல் சாகுபடி செய்ததாக கண்ணீர் வடிக்கின்றனர்.
- விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாதது அரசின் கையாலாகாத தனம்.
டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பை ஆய்வு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்யவில்லை.
* சாலைகளில் நெல்லை கொட்டி வைத்து 20 நாட்கள் விவசாயிகள் காத்திருந்தனர்.
* காட்டூரில் மட்டும் 4000 மூட்டைகள் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
* திருவாரூர் வடுவூரில் 7500 மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யவில்லை.
* தற்போது நெல்மணிகள் அனைத்தும் முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
* விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
* நாள் ஒன்றிற்கு 800 முதல் 900 நெல்மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் கூறினர்.
* அ.தி.மு.க. ஆட்சியில் தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.
* நாள் ஒன்றிற்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் பொய் கூறுகிறார்.
* விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாவிட்டால் எதற்காக அரசு இருக்கிறது.
* நகையை அடமானம் வைத்து நெல் சாகுபடி செய்ததாக கண்ணீர் வடிக்கின்றனர்.
* விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாதது அரசின் கையாலாகாத தனம்.
* செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஆகஸ்ட் 18-ந்தேதியே மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.
* தி.மு.க. ஆட்சியில் எல்லாம் வெற்று விளம்பரமாகவே உள்ளது.
* ஆதாரவிலையை உயர்த்தினாலும் இடு பொருட்கள் விலையும் உயரதானே செய்கிறது.
* உற்பத்தி அதிகரிக்கும் போது அதற்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களையும் அதிகரிக்க வேண்டும்.
* கொள்முதல் செய்த நெல்லை கூட முழுமையாக பாதுகாக்க முடியாத அரசாங்கம்.
* வேளாண் பட்ஜெட்டில் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.