தமிழ்நாடு செய்திகள்
பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
- தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.
கோவை:
கோவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது மக்களுடன் உரையாடிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க.
* தி.மு.க. ஆட்சியில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.
* தமிழ்நாட்டில் தூர்வாரப்படாத அணைகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முறையாக தூர்வாரப்பட்டன என்றார்.