தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டின் எதிர்கால சக்தியாக விஜய் உருவாகி வருகிறார்- செங்கோட்டையன்

Published On 2025-12-06 10:50 IST   |   Update On 2025-12-06 10:50:00 IST
  • ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது.
  • இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார்.

கோபி:

கோபியில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட அமைப்பு செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம், மாவட்ட அலுவலகங்களில் நடைபெறுகிறது. தலைமை உத்தரவின் படி, அம்பேத்கர் புகழை போற்றும் வகையில் நடைபெறுகிறது.

ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எழுச்சி நாயகன் மட்டும் அல்ல தமிழ்நாட்டின் எதிர்கால சக்தியாக உருவாகி உள்ளார் என்றார். 

Tags:    

Similar News