தமிழ்நாடு செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை- அமைச்சர் ரகுபதி

Published On 2024-12-07 15:04 IST   |   Update On 2024-12-07 15:04:00 IST
  • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
  • வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினரக பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய், நூலை வெளியிட்டார்.

பிறகு, விஜய் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய விஜய், 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்றார்.

2026 தேர்தல் கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸாகும் என விஜய் பேசிய நிலையில் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸூம் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை.

நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சி தான் நடத்துகிறோம்.

வாரிசு என்ற அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கவில்லை.

வேங்கைவயல் விவகாரம் குறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.

வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்எல்ஏவோ தலையிடவில்லை.

சீமான் உடன் நேரடியாக மோத திமுகவுக்கு எந்த பயமுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News