தமிழ்நாடு செய்திகள்

தேமுதிக- அதிமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்..!- பிரேமலதா

Published On 2025-08-31 16:52 IST   |   Update On 2025-08-31 16:52:00 IST
  • இபிஎஸ் பிரசார பயணம் குறித்து பிரேமலதா விமர்சனம்.
  • எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.

சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

இபிஎஸ் சுற்றுபயணத்திற்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்று உலகத்திற்கே தெரியும்.

எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு காசு கொடுத்துதான் ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.

நமது கூட்டத்திற்கு கேப்டன் மீதுள்ள அன்பால் தொண்டர்களும், மக்களும் திரண்டு வருகின்றனர்.

எம்பி பதவி கொடுப்பதாக கூறியே தேமுதிக- அதிமுக கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார்.

அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.

அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இபிஎஸ்-ன் மாண்பு பாதிக்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News