51-வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
- தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:
பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.
பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கும் அவர் மலர் தூவி வணங்கினார். இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, மயிலை த.வேலு மற்றும் ப.ரங்கநாதன், மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, மேயர் பிரியா, சேப்பாக்கம் மதன்மோகன், புழல் நாராயணன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.