தமிழ்நாடு செய்திகள்

ரகுமான் கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-21 11:25 IST   |   Update On 2025-08-21 11:25:00 IST
  • தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது.
  • இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான்.

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய 5 நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* ரகுமான் கானின் பேச்சுக்கும் எழுத்துக்கும் நான் ரசிகன்.

* தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது.

* ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞரிடம் இருந்தது.

* கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரகுமான் கான்.

* ரகுமான் கானை அ.தி.மு.க.வுக்கு வரச்சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்தபோதும் அவர் செல்லவில்லை.

* ரகுமான் கான் மீது வெடிகுண்டு வீசப்பட்ட போதிலும் அவர் அஞ்சவில்லை.

* மாநாடுகளில் ரகுமான் கான் பேச எழுந்தாலே கூட்டம் ஆர்ப்பரித்து விடும்.

* என்னுடைய உடல்நிலை குறித்து அக்கறையுடன் நலம் விசாரித்தார் ரகுமான் கான்.

* இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News