தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.
- தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* சோதனை எனக்கு புதிதல்ல சோதனையை வென்று வளர்ந்த என்னை எதிர்ப்போர் மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம்.
* அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.
* என்னை சீண்டி பார்ப்பவர்கள் மனதுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர என்னை ஒன்றும் செய்ய முடியாது.
* தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.
* 5 ஆண்டுகளாக மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு திட்டம் தீட்டி உழைத்திருக்கிறேன். உழைக்க காத்திருக்கிறேன்.
* தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான். தமிழ்நாட்டு மக்கள் மீது கூடுதலாக நம்பிக்கை உள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் முடிவு.
* உறுதியாக சொல்கிறேன்... தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும்.
* நாங்கள் தான் மீண்டும் வருவோம். மீண்டும் வருவோம். மீண்டும் மீண்டும் வெல்வோம் என்று கூறினார்.
இதையடுத்து சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.