தமிழ்நாடு செய்திகள்

வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

Published On 2025-05-17 12:12 IST   |   Update On 2025-05-17 12:43:00 IST
  • கவிஞர் வைரமுத்து தாயாரின் இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
  • தாயார் மறைவிற்கு வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.

அவருடைய இறப்பைத் தொடர்ந்து வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கவிஞர் வைரமுத்து இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர் பாலு, ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வைரமுத்துவின் மகன்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News