தமிழ்நாடு செய்திகள்

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது

Published On 2025-09-17 08:02 IST   |   Update On 2025-09-17 08:02:00 IST
  • ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
  • மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

சென்னை:

சென்னையில் இருந்து ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு ஆயுதபூஜை வரும் அக்டோபர் 1-ந்தேதியும், தீபாவளி அக்டோபர் 20-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊருக்கு செல்பவர்கள் பஸ் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தனர்.

பஸ்களை விட ரெயில்களில் ஏராளமானோர் பயணிப்பதால், ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இதனால் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும் எனவும், விரைவில் அதற்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வழங்க வேண்டும் எனவும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாகர்கோவில்-தாம்பரம், சென்னை சென்டிரல்- போத்தனூர், சென்டிரல்- செங்கோட்டை, எழும்பூர்-நெல்லை, எழும்பூர்-தூத்துக்குடி, நாகர்கோவில்-சென்டிரல் ஆகிய 6 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* நாகா்கோவிலில் இருந்து வரும் 28, அக்டோபர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை தோறும்) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை தோறும்) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

* நெல்லையில் இருந்து வரும் 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070), மறுநாள் காலை 10 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069), மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

* தூத்துக்குடியில் இருந்து வரும் 29, அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (06018), மறுநாள் காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06017), அதேநாள் இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

* நாகர்கோவிலில் இருந்து வரும் 30, அக்டோபர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06054), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வரும் அக்டோபர் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06053), அதேநாள் இரவு 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 25, அக்டோபர் 2,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06123), மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வரும் 26, அக்டோபர் 3,10,17,24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06124), மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

* சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24, அக்டோபர் 1,8,15,22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06121), மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 25, அக்டோபர் 3,9,16,23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06122), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான காலையில் இருந்து பயணிகள் காத்திருந்தனர். 

Tags:    

Similar News