தமிழ்நாடு செய்திகள்

கஞ்சா வழக்கில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமான் கைது

Published On 2025-10-06 12:55 IST   |   Update On 2025-10-06 12:55:00 IST
  • வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.
  • 15 கிராம் கஞ்சாவை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் வேலூர் இப்ராஹிம். இந்நிலையில், கஞ்சா வழக்கில் வேலூர் இப்ராஹிம் மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

மேலும், வேலூர் இப்ராஹிமின் கார் ஓட்டுநர் ரஷித்தையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 15 கிராம் கஞ்சா, கார் உள்ளிட்டவைகளை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News