தமிழ்நாடு செய்திகள்

ஓடும் ரெயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட ஐயப்ப பக்தர்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2024-12-08 21:48 IST   |   Update On 2024-12-08 21:48:00 IST
  • ஆந்திர ஐயப்ப பக்தர்கள்ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும்.

திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயிலில் ஆபத்தை உணராமல் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயில் சேலம் வழியாக சென்ற போது தடையை மீறி கற்பூரம் ஏற்றி ஐயப்ப பக்தர்கள் வழிபாடு செய்தனர். இணையத்தில் வெளியான வீடியோவை வைத்து போலீசார் அவர்கள் மீது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பிய பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News