தமிழ்நாடு செய்திகள்
மோதல் முடிவுக்கு வருமா?- ராமதாஸை சந்தித்தார் அன்புமணி
- அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரத்திற்கு வந்துள்ளார்.
- ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்துள்ளார். அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரத்திற்கு வந்துள்ளார்.
அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று குற்றம் சாட்டிய ராமதாசிடம், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு இன்று பதில் அளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
அதன்படி, ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.