தி.மு.க. அரசை கண்டித்து பா.ம.க. 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- அன்புமணி அறிவிப்பு
- சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
- 17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.