தமிழ்நாடு செய்திகள்

வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை

Published On 2025-06-17 13:11 IST   |   Update On 2025-06-17 13:11:00 IST
  • சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது.
  • தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

வேலூர்:

பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தொடர்ந்து நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி கலந்து கொண்டார்.

சித்திரை முழு நிலவு மாநாட்டை பார்த்து தி.மு.க. பயந்து விட்டது. வன்னியர்களுக்கு தி.மு.க. நம்பிக்கை துரோகம் இழத்தது.

நம் கட்சிக்குள் சூழ்ச்சியாளர்கள் உள்ளனர் அவர்கள் டாக்டர் ராமதாசிடம் தேவையில்லாததை சொல்லி சூழ்ச்சி செய்கிறார்கள் இந்த சூழ்ச்சியின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. அவர்களுடைய கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

இதனை தொடர்ந்து இன்று காலை அன்புமணி வேலூர் வந்தார். தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி சட்டமன்ற தொகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அன்புமணி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Tags:    

Similar News