தமிழ்நாடு செய்திகள்

அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் முறையீடு

Published On 2025-04-03 19:27 IST   |   Update On 2025-04-03 19:27:00 IST
  • தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.
  • சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் "அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News