தமிழ்நாடு செய்திகள்

விழுப்புரத்தில் மழை நிவாரணம் கேட்டு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- சி.வி.சண்முகம் எம்.பி. பங்கேற்பு

Published On 2024-12-21 11:31 IST   |   Update On 2024-12-21 11:31:00 IST
  • விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்:

மழை நிவாரணம் கேட்டு விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும், சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், சி.வி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அர்ச்சுனன், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், மாவட்ட மருத்துவரணி டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல்,தொழில் நுட்ப பிரிவு தலைவர் வக்கீல் பிரபாகரன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாலாஜி, நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், பன்னீர், சுரேஷ் பாபு, பேட்டை முருகன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோதண்டனர், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழை நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

Similar News