ஸ்ரீபெரும்புதூரில் 28-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- ஸ்ரீபெரும்பு தூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு உள்ள தி.மு.க. அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச்செல்வன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோம சுந்தரம், குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் செயலாளர், மதனந்தபுரம் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.