கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
- கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசினர்.
- பாதுகாப்பு பணியில் கும்பகோணம் கிழக்கு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
சுவாமிமலை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்படி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தஞ்சை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பு செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
மாநகர செயலாளர் ராம.ராமநாதன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அசோக்குமார், சோழபுரம் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பி.எஸ்.சேகர், மாவட்ட செயலாளர் பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண்டு கும்பகோணம் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, பாதாள சாக்கடை சுகாதார சீர்கேடு, தாராசுரம் பகுதியில் சீரற்ற குடிநீர் வினியோகம், சேதமடைந்த சாலைகள், பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவு நீர், அடிக்கடி பழுதாகும் தெரு விளக்குகள் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாதுகாப்பு பணியில் கும்பகோணம் கிழக்கு போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.