போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
- 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
- கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்பாடு உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
காலை முதல் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து ஸ்ரீகாந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீகாந்த் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.