தமிழ்நாடு செய்திகள்
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்..!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், வீடுகளுக்கே விண்ணப்பங்களை வந்து கொடுக்கும் புதிய திட்டம்.
- விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற புரட்சிகரத் திட்டம் நாளை தொடங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்!
அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்!
10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.