தமிழ்நாடு செய்திகள்

2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை- 90 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் மேயர் பிரியா

Published On 2026-02-18 14:49 IST   |   Update On 2026-02-18 15:09:00 IST
  • அனைத்து நிரந்தர, தற்காலிக மற்றும் வெளிமுகமை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம்.
  • 20 முக்கிய இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 90 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 62 அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்ட நிலையில் நடப்பாண்டில் 90 அறிவிப்புகளை சென்னை மேயர் பிரியா அறிவித்தார்.

இதில், கோடை காலம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

அனைத்து நிரந்தர, தற்காலிக மற்றும் வெளிமுகமை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 50 விளையாட்டு திடல்களை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் மெரினா, பெசன்ட் நகர், வண்ணாரப்படே்டை உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் செயல்படுத்தப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News