தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி- 2 பேர் உயிரிழப்பு

Published On 2025-09-10 14:29 IST   |   Update On 2025-09-10 14:29:00 IST
  • சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • மீனவர்கள் உதவியோடு ஜோதி, தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணையில் குதித்து 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இன்று காலை சிறிய மதகுகள் அருகில் இருந்து 4 பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சாரதாம்மாள் (வயது 75), அவரது மருமகன் லட்சுமணமூர்த்தி (50), மகள் ஜோதி (45), பேத்தி தீபிகா (20) என தெரியவந்தது.

மேலும் அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் அருகில் இருந்த மீனவர்கள் உதவியோடு ஜோதி மற்றும் தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News