தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர்: கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

Published On 2025-05-06 08:30 IST   |   Update On 2025-05-06 08:30:00 IST
  • மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தவறி விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்தியாவந்தனம் செய்யும் போது மாணவர்கள் 3 பேரும் படிக்கட்டில் இருந்து தவறி குளத்தில் விழுந்துள்ளனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சேலையூர் மடத்தில் பயின்றுவந்த ஹரிஹரன், வெங்கடரமணன், வீரராகவன் ஆகியோர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News