தமிழ்நாடு செய்திகள்
ரீல்ஸ் மோகத்தால் பலியான 17 வயது சிறுவன்
- சில நேரம் சட்டத்தை மீறும் வகையில் சாகசம் செய்து போலீசிடம் சிக்கும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம்:
இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில நேரம் சட்டத்தை மீறும் வகையில் சாகசம் செய்து போலீசிடம் சிக்கும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
அந்தவகையில், ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் அதி வேகமாக சென்ற சிறுவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லாவரத்தில் கேடிஎம் பைக்கில் அதி வேகமாக சென்ற 17 வயது சிறுவன் மற்றொரு பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.